Published : 23 Nov 2016 12:34 PM
Last Updated : 23 Nov 2016 12:34 PM

ரூ.500, 1000 பிரச்சினை: திருப்பூரில் வேலைநிறுத்தம்; அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு

பண மதிப்பு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிச.30-ம் தேதி வரை அல்லது புதிய நோட்டுகள் போது மான அளவுக்கு நடைமுறைக்கு வரும் வரை, பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நேற்று வேலைநிறுத்தம், கடையடைப்பு நடந்தது. 4 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. திருப்பூர் பெரியார் காலனி, அனுப்பர்பாளையம், குமரானந்தாபுரம், புதிய பேருந்து நிலையத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் குறிப்பிட்ட அள வில் கடைகள் அடைக்கப்பட்டிருந் தன. பெரும்பாலான நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கின.

வேலைநிறுத்தப் போராட்டத் தில் தொழிலாளர்கள் பங்கேற்க வில்லை. இதனால் கடையடைப்பு, வேலைநிறுத்தப் போராட்டம் தோல்வியடைந்ததாக தொழில் துறையினர் தெரிவித்தனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு நேற்று காலை வந்த போலீஸார், அங்கிருந்த அக்கட்சியைச் சேர்ந்த 12 பேரை முன்னெச்சரிக்கையாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x