Published : 27 Nov 2016 10:29 AM
Last Updated : 27 Nov 2016 10:29 AM

நளினி எழுதிய புத்தகம் ஆங்கிலம், இந்தியில் மொழிபெயர்க்க ஏற்பாடு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ளார். இவர் ‘ராஜீவ் படுகொலையில் மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்காவின் சந்திப்பும்’ என்ற தலைப்பில் எழுதிய புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நளினி எழுதிய புத்தகம் சமீபத்தில் தமிழில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட ஏற்பாடு நடந்துவருகிறது. மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த புத்தகம் டெல்லியில் வெளியிடப்படும். நளினி எழுதிய புத்தகத்தில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்தத் தகவல் 7 பேர் விடுதலைக்கு துணையாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x