Published : 19 Nov 2016 06:50 PM
Last Updated : 19 Nov 2016 06:50 PM
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், ''குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பூமத்தியரேகை, இந்தியப் பெருங்கடல் மற்றும் இலங்கை கடற்கரை பகுதியையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். கடந்த 24 மணி ராமேஸ்வரம், பாம்பன், குழித்துறையில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT