Published : 16 Nov 2022 06:12 AM
Last Updated : 16 Nov 2022 06:12 AM

நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

ராமேசுவரம்: வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 520-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், 5 நாட்களுக்கு பிறகு அதிக மீன்பாடு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது என எச்சரித்ததோடு, 3 விசைப்படகுகளில் வலைகளை அறுத்து கடலில் மூழ்கடித்து ஜி.பி.எஸ். வழிகாட்டும் கருவிகளையும் பறித்துச் சென்றுள்ளனர். இதனால், மீன்பாடு இல்லாமல் ஏமாற்றத்துடன் கரை திரும்பியதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x