Published : 15 Nov 2022 06:46 AM
Last Updated : 15 Nov 2022 06:46 AM

திருவாரூரில் 100-வது பிறந்த நாள் கண்ட தாய் மாமாவிடம் ஆசி பெற்ற முதல்வர் ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கோவில் திருமாளத்தில், தனது தாய் மாமா தட்சிணாமூர்த்தியின் 100-வது பிறந்த நாளையொட்டி அவரிடம் ஆசி பெற்ற முதல்வர் ஸ்டாலின்.

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கோவில் திருமாளத்தில் உள்ள தனது தாய் மாமாவிடம், அவரது 100-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆசி பெற்றார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகே கோவில் திருமாளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளின் உடன்பிறந்த அண்ணன் தட்சிணாமூர்த்தி வசித்து வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் 100-வது பிறந்தநாள். இதையடுத்து, அவருக்கு, நேற்று முன்தினமே, முதல்வர் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், சீர்காழியில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்த தமிழகமுதல்வர் ஸ்டாலின், கோவில் திருமாளம் கிராமத்துக்கு வந்து,தாய் மாமா தட்சிணாமூர்த்திக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, ஆசி பெற்றார். தொடர்ந்து, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வி.செந்தில் பாலாஜி, சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோரும் சால்வை அணிவித்து, ஆசி பெற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தட்சிணாமூர்த்தி, ‘‘திமுக நல்ல முறையில் ஆட்சி செய்கிறது என்பது, மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x