

சென்னை: சென்னை மாதவரம், தபால் பெட்டி பகுதியைச் சேர்ந்தவர் அகிலன் (32). இவரது இரண்டரை வயது மகள் அவந்திகா நேற்றுமுன்தினம் இரவு அலுமினியப் பாத்திரம் ஒன்றை தலையில் ஹெல்மெட் அணிவதுபோல் அணிந்துவிளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் குழந்தையின் தலை பாத்திரத்துக்குள் சிக்கிக் கொண்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த மாதவரம் தீயணைப்பு வீரர்கள் பாத்திரத்தை லாவகமாகவெட்டி அகற்றினர்.