Published : 17 Nov 2016 09:52 AM
Last Updated : 17 Nov 2016 09:52 AM

நகை, பணம் கடத்தலா?- ஹவுரா விரைவு ரயிலில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

திருச்சியிலிருந்து ஹவுரா செல்ல வேண் டிய ஹவுரா விரைவு ரயில் நேற்று முன் தினம் இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. இந்த விரைவு ரயிலில் நகை, பணம் கடத்திச் செல்லப் படுவதாக சிபிஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலையத் துக்கு நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் அந்த ரயிலின் சலூன் கோச் எனப்படும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட ரயில் பெட்டியை சோதனையிட்டனர். ரயிலில் இருந்து அந்தப் பெட்டியை மட்டும் தனியாக கழற்றி எழும்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி விட்டு, மற்ற பெட்டிகளுடன் ரயிலை அனுப்பி வைத்தனர். இந்த சிறப்பு பெட்டி சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டி தொழிற்சாலையின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்காக இணைக்கப்பட்டு இருந்தது. அந்த பாதுகாப்பு அதிகாரி புவனேஷ்வர் செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனையின் போது எவ்வளவு பணம், நகை கைப்பற்றப்பட்டது என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x