Published : 14 Nov 2022 07:18 AM
Last Updated : 14 Nov 2022 07:18 AM

சிகிச்சையில் மாணவியின் கால் அகற்றப்பட்ட விவகாரம்: அரசிடம் விசாரணை அறிக்கை தாக்கல்

சென்னை: சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது மாணவி, ராணி மேரி கல்லூரியில் படிக்கிறார். மாவட்ட, மாநில அளவில் நடக்கும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளார். இந்த நிலையில், மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வலது கால் மூட்டுபகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாக கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அதன் பிறகு, காலில் வீக்கம் ஏற்பட்டு மரத்துப்போன உணர்வு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவரது காலில்ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்ததும், தொற்று வேகமாகபரவிவருவதும் தெரியவந்தது.இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், உடனடியாக அவரது வலது காலின் முழங்கால் பகுதிக்கு மேல் அகற்றப்பட்டது.

இதற்கிடையே, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையேஇதற்கு காரணம் என்று மாணவியின் பெற்றோர், உறவினர்கள்குற்றம் சாட்டினர். இதையடுத்து,அரசு உத்தரவின்பேரில் இதுபற்றி விசாரணை நடத்த,சென்னை ராஜீவ் காந்தி அரசுமருத்துவமனை டீன் தேரணிராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “அலட்சியப் போக்குடன் மருத்துவத் துறையினர் அப்பெண்ணுக்கு சிகிச்சையளித்தது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அந்தப் பெண்ணுக்கு பேட்டரியில் இயங்கக் கூடிய அதிநவீனசெயற்கைக் காலை வாங்கி பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வலது காலை இழந்த பிரியாவுக்கு அரசுப் பணி வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று ஆவன செய்யப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x