ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு: நவ. 15 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு: நவ. 15 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு
Updated on
1 min read

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர்.

இவர்கள் நெடுந்தீவு அருகே நேற்று மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அதில் இருந்த முனியசாமி, முனீஸ்வரன், ராமர், ராஜேந்திரன் ஆகிய 4 மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி சிறைபிடித்தனர். இவர்கள் யாழ்ப் பாணம் மீன்வளத்துறை அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் ஊர்க்காவல்துறை நீதி மன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத் தப்பட்டனர்.

இவர்களை நவம்பர் 15 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 4 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in