Published : 12 Nov 2022 01:47 PM
Last Updated : 12 Nov 2022 01:47 PM

சென்னை மெட்ரோ ரயில் பணி: ஆழ்வார்பேட்டை - பாரதிதாசன் சாலை பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம்

பிரதிநித்துவப் படம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலையில் 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஆழ்வார்பேட்டை, கவிஞர் பாரதிதாசன் சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கவிஞர் பாரதிதாசன் சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் தொடர்பான விவரம்:

  • டிடிகே சாலையில் செமியர்ஸ், சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சி.பி. ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ.புரம் 2வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அண்ணா சாலையில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை வழியாக டி.டி.கே சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்றுப் பாதையில் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • இதன்படி, மாநகர பேருந்துகள் திருவள்ளுவர் சாலை, எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1-வது பிரதான சாலை வழியாகவும் செல்லலாம்.
  • டிடிகே சாலையில் இருந்து ஆழ்வார் பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பேருந்துகள் திருவள்ளுவர் சாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1வது பிரதான சாலை (அ) சி.வி.ராமன் சாலை வழியாக மாற்று பாதையில் செல்லலாம்.
  • டிடிகே சாலையில் உள்ள ஆழ்வார்பேட்டை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகர பேருந்துகள் நேராக சி.பி.ராமசாமி சாலை வழியாக செமியர்ஸ் சாலைக்கு செல்லலாம்.
  • லஸ் சர்ச் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பேருந்துகள் டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x