Published : 28 Nov 2016 12:38 PM
Last Updated : 28 Nov 2016 12:38 PM

ரூபாய் நோட்டு பிரச்சினை: ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் கைது

மத்திய அரசுக்கு எதிராக ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து இன்று (திங்கள்கிழமை) நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் மேற்கொண்டுள்ளன. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றுள்ளன.

சென்னை ராஜாஜி சாலையில் திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக கண்டனக் குரல்களையும், முழக்கங்களையும் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், ''இந்தியா முழுவதும் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது, இது கட்சி சார்ந்த போராட்டம் இல்லை மக்களின் நலம் சார்ந்த போராட்டம்'' என்று கூறினார். இதையடுத்து ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x