இடைத்தேர்தல்: 3 தொகுதிகளுக்கும் நவ.19ல் விடுமுறை அறிவிப்பு

இடைத்தேர்தல்:  3 தொகுதிகளுக்கும் நவ.19ல் விடுமுறை அறிவிப்பு
Updated on
1 min read

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தலை முன்னிட்டு, கரூர், தஞ்சை, மதுரை மாவட்டங்களில் நவம்பர் 19-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், ''செலாவணி முறிச்சட்டத்தின் படி,அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கும் நவம்பர் 19-ம் தேதி அந்த 3 தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த கரூர், தஞ்சை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கரூர், தஞ்சை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து பணியாளர்கள் மற்றும் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளைச் சேர்ந்த, வெளிமாவட்டங்களில் பணயாற்றும் பணியாளர்களுக்கும் நவம்பர் 19-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படவேண்டும்.

மேலும், கரூர், தஞ்சை, மதுரை மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு சார்ந்த தொழிற்சாலைகள், அனைத்து பள்ளிகள்,கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் மூடப்பட வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in