

நீதிமன்ற நேரத்தை வீணடிக்க காரண மாக இருந்த சிஎம்டிஏ உறுப்பினர் செய லருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித் துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதில் ரூ.5 ஆயிரத்தை மனுதாரருக் கும், ரூ.5 ஆயிரத்தை சமரச தீர்வு மையத்துக்கும் இரு வாரங்களுக்குள் வழங்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை பீர்க்கன்கரணை சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த கவுன்சிலர் ராகேஷ்குமார் அப்பகுதியில் சட்ட விரோதமாக குடியிருப்புடன் கூடிய வணிக வளாகம் கட்டியுள்ளதாகவும், அதை இடிக்கக்கோரியும் அப்பகுதி யைச் சேர்ந்த நாராயணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதில் “இந்த சட்டவிரோத கட்டி டத்தை இடிக்க சிஎம்டிஏ கடந்த 2014-ல் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதன் பிறகு சிஎம்டிஏ அதிகாரிகள் கட்டிடத்தை இடிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக் காமல் அமைதி காத்து வருகின்றனர். இதனால் அந்த கவுன்சிலர் குறுக்குவழி யில் மீண்டும் அந்த கட்டிடத்துக்கு அனு மதி பெறும் முயற்சியில் ஈடுபட்டுள் ளார். அவர் மறுவரையரை செய்யக் கோரி தாக்கல் செய்த அனைத்து முறையீடுகளும் தள்ளுபடியாகிவிட் டன. ஆனால் இதுவரை சிஎம்டிஏ நிர் வாகம் பிறப்பித்த உத்தரவை அமல் படுத்தவில்லை” என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு, ‘‘சிஎம்டிஏ அதிகாரிகள் முறையாக அந்த உத்தரவை அமல்படுத்தியிருந்தால் மனுதாரர் நீதிமன்றத்தை நாட வேண் டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. அரசு அதிகாரிகள் தங்களின் அடிப் படை பணிகளை சரியாக செய்ய தவறு வதையே இந்த வழக்கு காட்டுகிறது. அரசின் எல்லா நடவடிக்கைகளுக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கட்டும், அதன்பிறகு நடவடிக்கையை எடுத்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் அலட்சி யம் செய்வது வருந்தத்தக்கது. சட்ட விரோதக் கட்டிடத்தை இடிக்க அரசே உத்தரவிட்ட பிறகும் அதை அமல்படுத் தாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
எனவே தேவையில்லாமல் நீதிமன்ற நேரத்தை வீணடிக்க காரணமாக இருந்த சிஎம்டிஏ உறுப்பினர் செயல ருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப் படுகிறது. அதில் ரூ.5 ஆயிரத்தை மனுதாரருக்கும், ரூ.5 ஆயிரத்தை சமரச தீர்வு மையத்துக்கும் அவர் 2 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை நவ. 25-க்கு தள்ளிவைத்தனர்.