வேலூர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்

வேலூர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்
Updated on
1 min read

வேலூர்: தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2011-ல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா, அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை கடந்த மாதம் 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி முன்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜராகினர். வழக்கை வரும் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி வசந்தலீலா உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in