செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கனஅடி நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பர்த்துச் செல்லும் நீர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பர்த்துச் செல்லும் நீர்.
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தண்ணீர் வெளியேறும் பாதையின் அருகாமையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 4 நாட்களுக்கு முன் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல் கட்டமாக 100 கன அடி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து நீர் வரத்து வந்து கொண்டிருப்பதாலும் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 21.3 அடியாக உள்ளது.

மொத்த கொள்ளளவு 2,862 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 400 கன அடியாகவும் உள்ளது. வரும் நாட்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலைஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி நீரை வெளியேற்ற ஆட்சியர் மா.ஆர்த்தி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள 3-வது ஷெட்டர் வழியாக கூடுதலாக நீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேறி வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த நீர் செல்லும் பாதையின் அருகாமையில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in