

சென்னை: சென்னையில் விட்டுவிட்டு பெய்துவரும் கனமழை காரணமாக வட சென்னையின் ஒரு சில இடங்களில் 2-வது நாளாக புதன்கிழமை தண்ணீர் தேங்கியது.
தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதியில் தண்ணீர் வடிந்து விட்ட நிலையில், கொளத்தூர், வில்லிவாக்கம் பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் 2-வது நாளாக சென்னையில் பெய்து வரும் கனமழையின் பாதிப்பு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள்: