சிபிசிஐடி - சிறைத்துறை 2 டிஜிபிக்கள் இன்று ஓய்வு

சிபிசிஐடி - சிறைத்துறை 2 டிஜிபிக்கள் இன்று ஓய்வு
Updated on
1 min read

சென்னை: சிபிசிஐடி, சிறைத்துறை என இரு டிஜிபிக்கள் இன்று ஒரேநாளில் பணி ஓய்வு பெறுகின்றனர்.

இந்நிலையில், சிபிசிஐடி டிஜிபியாக உள்ள முகமது ஷகில் அக்தர், இன்றுடன் (திங்கள்) பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 1989-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தமிழக பிரிவில் இடம் பிடித்து தொடர்ந்து தமிழகத்தில் பணியாற்றி வருகிறார். சென்னை உட்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பணியாற்றியுள்ளார். அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, சிறைத்துறை டிஜிபியாக உள்ள சுனில் குமார் சிங்கும் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இவரும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் 1988-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in