Published : 28 Oct 2022 06:38 AM
Last Updated : 28 Oct 2022 06:38 AM

இலங்கை கடற்படையால் 7 மீனவர்கள் கைது: ராமேசுவரத்தில் நாளை வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள்.

ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 700-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மிக்கேல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அதிலிருந்த மீனவர்கள் கிளின்டன், அந்தோனி, வினிஸ்டன், மோசஸ், மரியான், வேல்ராஜ், அந்தோனி ஹானஸ்ட் ஆகிய 7 பேரை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, மீனவர்களை விடுவிக்கக் கோரி நாளை (அக். 29) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தையும், தங்கச்சி மடத்தில் ஆர்ப்பாட்டத்தையும் நடத்துவது என்று மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x