Published : 30 Nov 2016 08:09 AM
Last Updated : 30 Nov 2016 08:09 AM

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் ஆரோக்கியம் குறித்து தெரிவிக்க சட்டப்படியான நடவடிக்கை என்ன? - தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல் ஆரோக் கியம் குறித்த அறிக்கையை வேட்பு மனுவுடன் இணைக்க உத்தரவிடக்கோரி பொள்ளாச்சி யைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், வேட்பாளர்களின் உடல் ஆரோக்கியம் என்பது உள்ளாட்சி தேர்தலுக்கு மட்டுமல்ல, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் களுக்கும் பொருந்தும் எனக்கூறி இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நடந்தது. அப் போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுஞ்செழியன், ‘‘உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் களின் உடல் ஆரோக்கியம் குறித்த மருத்துவ அறிக்கையை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய தமிழ் நாடு பஞ்சாயத்து சட்டத்தில் விதிகள் ஏதுமில்லை’’ என்றார்.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், ‘‘உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்களின் சொத்து கணக்குகளை தாக்கல் செய்ய தனியாக சட்டம் ஏதும் இல்லை. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் விதிகளை வகுத்துள்ளது. வேட்பாளர்கள் சொத்து கணக்கு களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடுவது போல, தேர்தலில் போட்டியிடுவதற்கு 30 நாட்களுக்கு முன்பாக அவர்களின் உடல் ஆரோக்கியம் குறித்த பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட உள்ளதாகக் கூறி கால அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதி, ‘‘வேட்பாளர்களின் உடல் ஆரோக்கியம் குறித்து தெரிவிக்க சட்டப்படி என்ன நடவடிக்கை? எடுக் கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் ஆகியவை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசா ரணையை வரும் வெள்ளிக் கிழமைக்கு தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x