Published : 03 Nov 2016 10:13 AM
Last Updated : 03 Nov 2016 10:13 AM

கல்லறை திருநாள் அனுசரிப்பு: உறவினர்களின் கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் கண்ணீர் அஞ்சலி

கல்லறை திருநாளையொட்டி உறவினர்களின் கல்லறைகளில் மலர்களால் அலங்கரித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் கிறிஸ் தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இறந்தவர்களை நினைவு கூரும் கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி, கல்லறை தோட்டங்களில் சிறப்பு திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றன. கல் லறை திருநாளையொட்டி சென்னையில் கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டங்களுக்குச் சென்று ஜெபம் செய்தனர். சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள புனித பேட்ரிக் கல்லறை தோட்டம், செயின்ட் மேரீஸ் கல்லறை தோட் டம், காசிமேடு கல்லறை தோட்டம், கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டம், சாந்தோம் கியூபிள் ஐலேண்ட் கல்லறை தோட்டம் உள்பட சென்னை நகரில் உள்ள கல்லறை தோட்டங்களுக்கும் கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்ப மாகச் சென்றனர்.

உறவினர்களின் கல்லறை களை வண்ண வண்ண மலர்களால் அலங்கரித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். ஒருசிலர் இறந்த தங்கள் உறவினர் களுக்குப் பிடித்தமான உணவு பதார்த்தங்களை கல்லறையில் படையல் செய்து வைத் திருந்தனர்.

இதில் பிரியாணி, சிக்கன்-65, பணியாரம், பிஸ்கெட் ஆகியவை யும் இடம்பெற்றிருந்தன.

2500-க்கும் மேற்பட்ட கல்லறைகளை கொண்ட மிகப் பெரிய கல்லறை தோட்டங்களில் ஒன்றான செயின்ட் பேட்ரிக் கல்லறை தோட்டத்தில் நேற்று காலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை அடுத்தடுத்து தொடர்ந்து திருப்பலிகள் நிறை வேற்றப்பட்டன.

சிறப்பு திருப்பலி

கல்லறை திருநாளை ஒட்டி அனைத்து கிறிஸ்தவ தேவா லயங்களிலும் நேற்று சிறப்பு திருப்பலி, சிறப்பு வழிபாடும் நடைபெற்றன. திருப்பலி, வழிபாடு முடிந்த பின்னர் பாதிரியார்கள் கல்லறை தோட்டத்துக்குச் சென்று இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x