Published : 27 Oct 2022 04:00 AM
Last Updated : 27 Oct 2022 04:00 AM

மருது சகோதரர்கள் குருபூஜை | சிவகங்கையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் மருது சகோதரர்களுக் கான குருபூஜையையொட்டி 7 ஒன்றியங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் நினைவு தினம் அக். 24-ம் தேதி திருப்பத்தூரில் அரசு நிகழ்ச்சியாகவும், அக். 27-ம் தேதி காளையார்கோவிலில் சமுதாயத் தலைவர்கள் சார்பில் குருபூஜையாகவும் நடத்தப்படு கிறது.

அதன்படி இன்று காளையார்கோவிலில் நடக்கும் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய 7 ஒன்றியங்களைச் சேர்ந்த பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x