Published : 23 Nov 2016 10:02 AM
Last Updated : 23 Nov 2016 10:02 AM
வந்தவாசி அருகே வங்காரம் கிரா மத்தில் வசிப்பவர் அப்பாண் டைராசன்(74). தலைமை ஆசிரிய ராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் சமண மதத்தைச் சேர்ந்தவர்.
முன்னோர் தந்த முத்துக்கள், மேருமந்திரர் சரிதம், ஆதிபகவன் சரிதம், நேமிநாதர் சரிதம் உட்பட 60-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
ஆன்மிக சொற்பொழிவாள ரான இவர், மோட்சம் அடைவதற்காக கடந்த 20-ம் தேதியில் இருந்து ‘சல்லேகனை’ (உண்ணாமல் உயிர் துறத்தல்) விரதம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விரதம் மேற்கொள்வோர், சில நாட்களுக்கு நீர் ஆகாரம் மட்டுமே எடுத்துக்கொள்வர். பின்னர், அதையும் தவிர்த்துவிடுவர். இவர், வந்தவாசி அடுத்த பொன்னூர் மலைக் கோயில் அடிவாரத்தில் தங்கி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT