Published : 21 Nov 2016 09:20 AM
Last Updated : 21 Nov 2016 09:20 AM
கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அணு மின் நிலைய திட்ட வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் அவர் கூறும் போது, ‘‘கூடங்குளத்தில் முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகள் செயல்பட்டு வருகின் றன. இவற்றில் இருந்து தலா 800 மெகாவாட் அளவுக்கும் மேல் மின்சாரம் உற்பத்தி செய் யப்படுகிறது.
முதல் அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின் சாரத்தில் 59 சதவீதம் வரை தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது. 2-வது அணு உலையில் இருந்து 56 சதவீத மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது.
2-வது அணு உலை ஆய்வுப் பணி காரணமாக கடந்த ஒரு வாரமாக செயல்படவில்லை. 3-வது மற்றும் 4-வது அணு உலை களுக்கான காங்கிரீட் போடும் பணி நடைபெற்று வருகிறது.
5-வது மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது அணு உலை தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அணு உலைகளால் மீனவர்களுக்கோ, பொது மக்களுக்கோ எவ்வித பாதிப்பு களும் ஏற்படாது’’ என்றார்.
2-வது அணு உலை ஆய்வுப் பணி காரணமாக கடந்த ஒரு வாரமாக செயல்படவில்லை. 3-வது மற்றும் 4-வது அணு உலை களுக்கான காங்கிரீட் போடும் பணி நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT