Published : 23 Oct 2022 01:08 PM
Last Updated : 23 Oct 2022 01:08 PM

தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 50 சுகாதார நிலையங்களுக்கு இடங்கள் தேர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: " கிராமப்புறத்தில் 25 புதிய அரசு ஆரம்ப நிலையங்களும் மற்றும் நகர்ப்புறத்தில் 25 புதிய நகர்ப்புற அரசு சுகாதார நிலையங்களும் தோற்றுவிக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு புதிய அரசு ஆரம்ப நிலையங்கள் தோற்றுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழ்நாட்டில் 2127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.அரசின் கொள்கைப்படி ஒர் ஊராட்சி ஒன்றியத்தில் 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் 50,000 மக்கள் தொகைக்கு ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் அமைக்கப்படும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏதும் தோற்றுவிக்கப்படவில்லை.

சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்துவது, பொது மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவது அத்தியாவசியமாகிறது. சட்டமன்ற அறிவிப்புகள் எண் – 33 மற்றும் 44-ன் படி, கிராமப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 25 புதிய அரசு ஆரம்ப நிலையங்களும்,நகர்ப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 25 புதிய நகர்ப்புற அரசு சுகாதார நிலையங்கள் நிறுவப்படும்.

இது சம்பந்தமாக மாவட்ட அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி கிராமப்புறத்தில் 25 புதிய அரசு ஆரம்ப நிலையங்களும் மற்றும் நகர்ப்புறத்தில் 25 புதிய நகர்ப்புற அரசு சுகாதார நிலையங்களும் தோற்றுவிக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு புதிய அரசு ஆரம்ப நிலையங்கள் தோற்றுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஓர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூபாய் 126 லட்சம் செலவில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூபாய் 63 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டப்படும். மேலும் இதற்கு தேவையான மனிதவளம், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆண்டிற்கு ரூபாய் 57 கோடி செலவில் வழங்கப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூபாய் 120 கோடியாகும்.
நடைமுறையில் ஏற்கெனவே இயங்கி வரும் மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள் போல மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு புதிய அரசு ஆரம்ப நிலையங்கள் இயங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x