ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் 3 பேர் அகதியாக தனுஷ்கோடி வருகை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் 3 பேர் அகதியாக தனுஷ்கோடி வருகை
Updated on
1 min read

இலங்கை தமிழர்கள் 3 பேர் அகதிகளாக நேற்று தனுஷ்கோடிக்கு வந்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஜெயம் என்பவரது மனைவி சாந்தி(42), இவரது மகன் அஜந்தன்(17), மகள் சுரபி(11) ஆகிய 3 இலங்கை தமிழர்களும், நேற்று முன்தினம் இரவு படகு மூலம் புறப்பட்டு இன்று காலை 7 மணி அளவில் தனுஷ்கோடி அருகே உள்ள 3-ம் மணல் தீடையில் வந்திறங்கினர்.

இதுகுறித்து மீனவர்கள் அளித்த தகவலின் பேரில், ராமேசுவரம் மெரைன் போலீஸார், படகில் அங்கு சென்று அவர்களை தனுஷ்கோடிக்கு அழைத்து வந்தனர். அவர்களை மண்டபம் மெரைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in