Published : 04 Nov 2016 08:26 AM
Last Updated : 04 Nov 2016 08:26 AM

கமிஷன் தொகையை உயர்த்தக் கோரி பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யாமல் டீலர்கள் போராட்டம்

பெட்ரோல், டீசல் டீலர்கள் தங்களுக் கான கமிஷன் தொகையை உயர்த்தக் கோரி எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யாமல் இருக்கும் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோல், டீசல் டீலர்கள் கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் கே.சுரேஷ்குமார் கூறியதாவது:

இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து பெட்ரோல், டீசல் ஆகியவற்றை கொள்முதல் செய்து ஆயிரக்கணக்கான டீலர்கள் அதனை விற்பனை செய்து வரு கின்றன. டீலர்களுக்கான கமிஷன் தொகை வழங்குவது தொடர்பாக அபூர்வா சந்திரா கமிட்டி ஒரு பரிந்துரையை அளித்தது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3.50, டீசலுக்கு ரூ.2 என கமிஷன் வழங்க பரிந்துரைத்தது.

இதனை செயல்படுத்தாத எண் ணெய் நிறுவனங்கள் மாறாக அவர் களுக்கு சாதகமான விஷயங்களை மட்டுமே செயல்படுத்துகின்றன. மிகக் குறைவான அளவில்தான் கமிஷன் வழங்கப்படுகிறது. இதனைக் கண்டிக்கும் வகை யில் நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் எண்ணெய் நிறுவனங் களிடம் கொள்முதல் செய்யாத போராட்டத்தை தொடங்கியுள் ளோம். இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக் காக மும்பைக்கு அழைத்துள்ளன. இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறா விட்டால், போராட்டங்கள் தொட ரும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x