

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான பேரணி நவம்பர் 5 (நாளை) அன்று தொடங்கப்படும் என்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் பெரும்பகுதி விவசாயம் காவிரி நீரை நம்பியே உள்ளது. இந்நிலை யில், காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுப்பது வாடிக்கையாகியுள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் குறுவை சாகுபடி பொய்த்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக் கப்பட்டால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்றிருந்த நிலையில், மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனைக் கண்டிக்கும் வகையிலும், விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகள், கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழு பேரணி ஒன்றை நடத்த வுள்ளது. இந்தப் பேரணி கன்னியா குமரியில் உள்ள காந்தி மணி மண்டபத்தில் வரும் 5-ம் தேதி தொடங்கி சென்னை அடை யாறில் உள்ள காந்தி மண்டபம் அருகே வரும் 11-ம் தேதி நிறைவடையும். இதை யடுத்து, கிண்டி ஆளுநர் மாளிகையில் கோரிக்கை மனுவை அளிக்கவுள்ளோம்.
எங்கள் பேரணி 28 மாவட்டங்கள் வழியாக சென்னையை அடையவுள்ளது. பேரணிக்கு அனைத்து அரசியல் கட்சி களிடமும் ஆதரவு கோரவுள்ளோம்.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
பேட்டியின்போது தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் சிவ.ராஜசேகரன் சென்னை மாவட்டத் தலைவர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.