Published : 23 Nov 2016 08:26 AM
Last Updated : 23 Nov 2016 08:26 AM

டிசம்பருக்குள் நடத்த உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை: உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்துவீர்கள்? - மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

உள்ளாட்சி தேர்தலை டிசம்பருக்குள் நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தேர்தல் அறிவிப்பை எப்போது வெளியிடுவீர்கள்? என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்பு களுக்கு கடந்த அக்டோபரில் 2 கட்டமாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறி விப்பு வெளியிட்டது. இதில், பழங்குடியினருக்கு உரிய பிரதி நிதித்துவப்படி இடஒதுக்கீடு வழங்கவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப் பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அவசர கதியில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பஞ்சாயத்து சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் கூறி தேர்தலை ரத்து செய்து கடந்த அக்டோபர் 4-ல் உத்தரவிட்டார். ஏற்கெனவே பொறுப்பில் இருக்கும் நிர்வாகி களின் பதவிக்காலம் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமிக்கவும், முறைப்படி மீண்டும் அறிவிக்கை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வில்லை என்று கூறி பலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி என்.கிருபாகரன் முன்பு இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. அதை விசாரித்த அமர்வு நீதிமன்ற நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை. இந்த சூழ லில் டிசம்பர் 31-ம் தேதிக் குள் தேர்தலை நடத்தி முடிக்கு மாறு மாநில தேர்தல் ஆணை யத்துக்கு ஏற்கெனவே உத்தர விடப்பட்டுள்ளது. ஆனால், உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக மாநில தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எப்போது வெளியிடுவீர்கள்?

இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளிக்க மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர் அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணையை 28-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x