Published : 16 Oct 2022 01:40 PM
Last Updated : 16 Oct 2022 01:40 PM

தமிழகத்தில் இன்று 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகப் பகுதிகளில்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, விருதுநகர்‌, தென்காசி, வேலூர்‌,திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம்‌, நாமக்கல்‌, ஈரோடு, கரூர்‌, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும்‌ மதுரை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகம் ,புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, விருதுநகர்‌, தென்காசி, கன்னியாகுமரி, இருப்பத்தூர்‌, கிருஷ்ணகுரி, தருமபுரி, கள்ளக்குறிச்சு, சேலம்‌, ஈரோடு,நாமக்கல்‌, கரூர்‌, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, கடலூர்‌, பெரம்பலூர்‌, அரியலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில இடங்களில் மழை பெய்யும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x