மத்திய அரசு பணியில் இருந்து ஐபிஎஸ் விஜயகுமார் ராஜினாமா

மத்திய அரசு பணியில் இருந்து ஐபிஎஸ் விஜயகுமார் ராஜினாமா
Updated on
1 min read

சென்னை: மத்திய அரசு பணியை ஐபிஎஸ் விஜயகுமார் ராஜினாமா செய்தார்.

தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார். 1975-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த இவர், பட்டுக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டார். பின்னர் மத்திய அரசு பணிக்கு அனுப்பப்பட்டு, ராஜீவ் காந்தியின் மெய்க்காவல் படை தலைவரானார். பின்னர் தமிழகம் திரும்பிய அவர், திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளராக பதவிவகித்தார். 1991-ல் ஜெயலலிதா முதல்வரானதும் அவரது மெய்க்காவல் படை தலைவர் ஆனார்.

பிறகு, சென்னை காவல் ஆணையராகவும், பிறகு கமாண்டோ படை தலைவராகவும் நியமிக்கப்பட்ட விஜயகுமார், 2004-ல் வீரப்பனை சுட்டுக் கொன்றார்.

மீண்டும் மத்திய அரசு பணிக்கு அனுப்பப்பட்டு, மத்திய ஆயுதப்படை இயக்குநராக பதவி வகித்து, 2012-ல் ஓய்வு பெற்றார்.

அவருக்கு மத்திய அரசு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்கியது. 2018-ல் அப்பணியில் இருந்து ஓய்வுபெற்று, ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக செயல்பட்டார். பின்னர், உள்துறை அமைச்சக மூத்த ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், அப்பதவியை விஜயகுமார் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணம் என்று கூறியுள்ள அவர், பிரதமர் மோடி, அமித்ஷா, உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in