Published : 15 Oct 2022 12:59 PM
Last Updated : 15 Oct 2022 12:59 PM

கடலில் பேனா வைக்க நிதி உள்ளபோது ஊழியர்களின் போனஸில் கைவைக்கலாமா? - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன் | கோப்புப்படம்

சென்னை: கடலுக்குள் பேனா வைக்க திமுக அரசிடம் நிதி இருக்கும்போது, கடமையைச் செய்யும் அரசு ஊழியர்களின் உரிமையான தீபாவளி போனஸில் கை வைப்பது எந்த வகையில் நியாயமாகும்?" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல.

கரோனாவைக் காரணம் காட்டி இந்த ஆண்டும் இத்தகைய முடிவை திமுக அரசு எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. கடலுக்குள் பேனா வைக்க திமுக அரசிடம் நிதி இருக்கும்போது, கடமையைச் செய்யும் அரசு ஊழியர்களின் உரிமையான தீபாவளி போனஸில் கை வைப்பது எந்த வகையில் நியாயமாகும்? " என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு 10 சதவீத போனஸ் அறிவித்து நேற்று அரசாணை வெளியிட்டது. அதாவது, 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை உள்பட 10 சதவீத போனஸ் வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x