முதல்வர் குறித்து அவதூறு கருத்து: பட்டதாரி இளைஞர் சென்னையில் கைது

முதல்வர் குறித்து அவதூறு கருத்து: பட்டதாரி இளைஞர் சென்னையில் கைது
Updated on
1 min read

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பரப்பிய பட்டதாரி இளைஞரை மத்திய சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். சென்னை கேகே நகரைச் சேர்ந்தவர் அரவிந்த்(39). பட்டதாரி இளைஞர். இவர் சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும், தமிழக அரசு குறித்தும் அவதூறு கருத்துகளை பரப்பி வந்தார்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதன்பேரில், மத்திய சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து, அரவிந்த்தை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in