Published : 13 Oct 2022 06:54 AM
Last Updated : 13 Oct 2022 06:54 AM

இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம்: அப்பாவு விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் வேளாண்மைத் துறை சார்பில் ரூ. 6.25 கோடி மதிப்பீட்டில் வாழைத்தார் ஏல மையம், மதிப்பு கூட்டுப்பொருட்கள் உற்பத்தி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தமிழக முதல்வர் ஸ்டாலின் இப்பகுதியில் வாழைத்தார் ஏல மையம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். கட்டிடப் பணிகள்ஓராண்டுக்குள் முடிவடையும்.

சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் தலா 2 கடிதங்களை கொடுத்துள்ளனர். அவற்றை நான் படிக்கவில்லை. சென்னைக்கு சென்றதும் அந்த கடிதங்களை படித்து பார்த்து, நியாயமான முறையில் தீர்வு காணப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x