Published : 13 Oct 2022 06:35 AM
Last Updated : 13 Oct 2022 06:35 AM

மெட்ரோ சுரங்க பணி: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் பால்பண்ணை அருகே சுரங்கம் தோண்டும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி செலவில் நடைபெறுகிறது. இந்தப் பணிகளை2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறுஇடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப் பாதைக்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

அதிலும், சுரங்கப்பாதைப்பணிக்காக, மொத்தம் 23 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதுவரை 5 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் வந்துள்ளன. இந்நிலையில், மாதவரம் பால்பண்ணை அருகில் சுரங்கம்தோண்டும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். இதையடுத்து, மெட்ரோ ரயில் பாதைக்கு முதல்சுரங்கம் துளையிடும் இயந்திரத்தின் பணி தொடங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x