ஆம்புலன்ஸ் வாங்குவதற்காக சக்தி மசாலா ரூ.19 லட்சம் நிதியுதவி

பாசூர் எரிவாயு மயானத்துக்கு ஆம்புலன்ஸ் வாங்க ரூ.19 லட்சத்துக்கான காசோலையை சக்தி மசாலா நிறுவனர்கள்  பி.சி. துரைசாமி மற்றும் சாந்திதுரைசாமி ஆகியோர், சங்கமம் டிரஸ்டின் துணைத்தலைவர் எ.பி.ஜெகதீசன், பொருளாளர் பி.எஸ். இளங்கோ, செயலாளர் பிகேபி அருண் ஆகியோரிடம் வழங்கினர்.
பாசூர் எரிவாயு மயானத்துக்கு ஆம்புலன்ஸ் வாங்க ரூ.19 லட்சத்துக்கான காசோலையை சக்தி மசாலா நிறுவனர்கள் பி.சி. துரைசாமி மற்றும் சாந்திதுரைசாமி ஆகியோர், சங்கமம் டிரஸ்டின் துணைத்தலைவர் எ.பி.ஜெகதீசன், பொருளாளர் பி.எஸ். இளங்கோ, செயலாளர் பிகேபி அருண் ஆகியோரிடம் வழங்கினர்.
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் மொடக் குறிச்சியை அடுத்த பாசூர் கிராமத்தில், ஈரோடு சங்கமம் டிரஸ்ட் சார்பில், எரிவாயு மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மயானத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வாங்க, ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.19 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

அதற்கான காசோலையை சக்தி மசாலா நிறுவனர்கள் பி.சி. துரைசாமி மற்றும் சாந்தி துரைசாமி ஆகியோர், சங்கமம் டிரஸ்டின் துணைத்தலைவர் எ.பி.ஜெகதீசன், பொருளாளர் பி.எஸ். இளங்கோ, செயலாளர் பிகேபி அருண் ஆகியோரிடம் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in