

சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் இடையே வரும் 25-ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்:06056),
திருவனந்தபுரத்திலிருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் சென்றடையும்.
இதேபோல, சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையே வரும் 26-ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்:06055), சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
இந்த ரயில்கள் கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு,சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.