

சென்னை: மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக எம்.பி. கனிமொழியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து, கனிமொழி வாழ்த்துப் பெற்றார்.
முன்னதாக, மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களவை உறுப்பினர்கள் 17 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் இந்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலைக்குழுவின் தலைவராக திமுக எம்.பி. கனிமொழி நியமிக்கப்பட்டிருந்தார்.