Published : 06 Oct 2022 06:24 AM
Last Updated : 06 Oct 2022 06:24 AM

வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறையா? - அதிகாரிகள் விளக்கம்

சென்னை: அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கிகளுக்கு விடுமுறை என்பது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். தமிழகத்தில் நடப்பு அக்டோபர் மாதத்தில் 3 நாட்கள் மட்டுமே பொது விடுமுறை. இதன்படி, அக். 4 சரஸ்வதி பூஜை, 5-ம் தேதி விஜயதசமி மற்றும்24-ம் தேதி தீபாவளி ஆகியவற்றுக்கு மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறையாகும். அக். 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினம் பொது விடுமுறை நாளாகும். ஆனால், இந்த ஆண்டு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வந்ததால் அன்றைய தினம் பொது விடுமுறை இல்லை. மேலும், 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு வழக்கம்போல விடுமுறையாகும். எனவே, சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று வங்கி அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x