மின்சார ரயிலில் ஆயுஜ பூஜை கொண்டாட்டம் - விசாரணைக்கு உத்தரவிட்ட தெற்கு ரயில்வே

மின்சார ரயிலில் ஆயுஜ பூஜை கொண்டாடிய பயணிகள்
மின்சார ரயிலில் ஆயுஜ பூஜை கொண்டாடிய பயணிகள்
Updated on
1 min read

சென்னை: மின்சார ரயிலில் ஆயுஜ பூஜை கொண்டாடியது தொடர்பாக விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்புப் படைக்கு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய குறிப்பிட்ட ரயில் பெட்டியில் நண்பர்கள் குழு ஒன்று ஒவ்வொரு வருடமும் ஆயுத பூஜையை கொண்டாடி வருவதாகவும், பத்தாவது வருட ஆயுத பூஜை இன்று கொண்டாடப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

ரயில் பெட்டிக்குள்ளேயே வண்ணக் கலர் பேப்பர்களை தோரணமாக கட்டி, சாமி படம் வைத்து வணங்கி, சக பயணிகளுக்கு சுண்டல், வெல்லம், பொங்கல் உள்ளிட்ட பிரசாதத்தை அந்த நண்பர்கள் குழு வழங்கியுள்ளது. மேலும், சூரை தேங்காய் உடைத்தும் பூசணிக்காய் உடைத்தும் அவர்கள் ரயில் பெட்டியில் ஆயுத பூஜை கொண்டாடி உள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்புப் படைக்கு சென்னை கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in