Published : 04 Oct 2022 12:59 AM
Last Updated : 04 Oct 2022 12:59 AM

திருவண்ணாமலை | அண்ணாமலையார் கோயிலில் ஒரு மாத உண்டியல் காணிக்கை ரூ.1.60 கோடி

படவிளக்கம்: தி.மலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.60 கோடியை பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவல பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்ட லிங்க கோயில்கள் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் காணிக்கையை, மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி, ஆவணி மாத பவுர்ணமிக்கு பிறகு, அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி இன்று(3-ம் தேதி) நடைபெற்றது. கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.1,60,13,349 ரொக்கம், 246 கிராம் தங்கம், 1.316 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x