Published : 16 Nov 2016 09:33 AM
Last Updated : 16 Nov 2016 09:33 AM

பெட்ரோல் பங்க்களில் வங்கி கவுன்ட்டர்கள் திறக்க கோரிக்கை

தமிழ்நாடு பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பு தலைவர் கே.பி.முரளி பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத் தில் குறிப்பிட்டுள்ளதாவது:

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளதை பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பு வரவேற் கிறது. அதே சமயம் பொது மக்களிடம் இருந்து ரத்து செய் யப்பட்ட ரூபாய் நோட்டுகளை நாங்கள் முடிந்த அளவு மாற்றிக் கொள்கிறோம். சில சமயங்களில் சில்லறை வழங்க முடியாததால் அந்த ரூபாய் நோட்டுகளை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வாடிக்கை யாளர்களுக்கும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.

எனவே, பொதுமக்களின் வசதிக்காக தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 750 பெட்ரோல் பங்க்களில் வங்கிகள் சார்பில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறந்து சில்லறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முரளி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x