Published : 03 Oct 2022 06:51 AM
Last Updated : 03 Oct 2022 06:51 AM

ஆயுதபூஜைக்கு இதுவரை 5,679 பேருந்துகள் இயக்கம்: சென்னையில் இருந்து 3.12 லட்சம் பேர் பயணம்

சென்னை

ஆயுதபூஜையையொட்டி சென்னையில் இருந்து இதுவரை இயக்கப்பட்ட 5,679 பேருந்துகள் மூலம் 3.12 லட்சம் பேர்பயணித்திருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள்கூறியதாவது: ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் நெரிசலின்றி பயணிக்கும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். அதன்படி, செப்.30-ம் தேதிவழக்கமாக இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 744 பேருந்துகள் இயக்கப்பட்டன. அவற்றில் 1 லட்சத்து 62,200 பேர் பயணம் செய்தனர்.

சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: இதையடுத்து அக்.1-ம்தேதி வழக்கமான 2,100 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. இரவு 8 மணி நிலவரப்படி சுமார் 2.50 லட்சம் பேர் பயணித்திருந்தனர். அன்றைய தினம் மட்டும்735 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

3.12 லட்சம் பேர் பயணம்: அதன்படி, செப்.30, அக்.1ஆகிய நாள்களில் மொத்தம் 5,679 பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. அவற்றில் 3 லட்சத்து 12,345 பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். நேற்றும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. நாளை (அக்.4) ஆயுதபூஜை கொண்டாடப்பட இருப்பதால், இன்றும் (அக்.3) மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கக் கூடும். எனவே, இன்றைய தினமும் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x