Published : 02 Oct 2022 04:16 AM
Last Updated : 02 Oct 2022 04:16 AM

6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 2-ம் தேதி ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது மழைபெய்யக் கூடும். 3, 4, 5-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். 2-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x