Published : 27 Nov 2016 11:15 AM
Last Updated : 27 Nov 2016 11:15 AM
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவை யொட்டி, கோவையில் நேற்று நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தொடங்கிய அமைதி ஊர்வலம் 100 அடி சாலை வழியாக, சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் நிறைவடைந்தது.
அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி, எம்.ஆறுமுகம், சி.பி.ஐ. (எம்.எல்.) கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பேசினர். இதில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவையொட்டி, கோவையில் நேற்று நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றோர்.
படம்: ஜெ.மனோகரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT