Published : 27 Sep 2022 04:41 PM
Last Updated : 27 Sep 2022 04:41 PM

தமிழகத்தில் மதவாத சக்திகள் ஒருபோதும் காலூன்ற முடியாது: வைகோ 

வைகோ | கோப்புப்படம்

சென்னை: " தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது. காவல் துறை டிஜிபி அறிக்கை கொடுத்தது மட்டுமின்றி, காவல் துறை மிகத் திறமையாக செயல்பட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகின்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை பாதுகாத்து வருகின்றனர்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "தமிழ்நாடு மிக அருமையாக முதல்வர் ஸ்டாலினால் வழிநடத்திச் செல்லப்படுகிறது. இதற்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்று சிலர் முயற்சி செய்கின்றனர்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது. காவல் துறை டிஜிபி அறிக்கை கொடுத்தது மட்டுமின்றி, காவல்துறை மிகத் திறமையாக செயல்பட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகின்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை பாதுகாத்து வருகின்றனர்" என்றார்.

ஆர்எஸ்எஸ் பேரணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழகத்தில் மதவாத சக்திகள் காலூன்ற முடியுமா என்று முயற்சிக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x