Published : 05 Nov 2016 09:12 AM
Last Updated : 05 Nov 2016 09:12 AM
சசிகலா புஷ்பா எம்பியின் ஆதரவாளரான நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி, குண்டர் தடுப்புச் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.
சசிகலா புஷ்பா எம்பிக்கு எதி ரான வழக்குகளில் ஆஜராகும் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரின் வீடு, கடந்த மாதம் 11-ம் தேதி தாக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஹரி, ராமலிங்கம், சித்திரைகுமார் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு திருநெல்வேலி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 பேரும் தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனிடையே ஹரியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாவட்ட காவல்துறை எஸ்பி விக்ரமன் பரிந்துரை செய்திருந்தார். அதன்படி ஹரியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT