காய்ச்சல் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதி

கோப்புப் படம்: அமைச்சர் அன்பில் மகேஸ்
கோப்புப் படம்: அமைச்சர் அன்பில் மகேஸ்
Updated on
1 min read

சென்னை: காய்ச்சல் காரணமாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஸ், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர் அன்பில் மகேசக்கு உரிய சிகிச்சைகளை மருத்துவர்கள் வழங்கி வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in