Published : 20 Nov 2016 10:55 AM
Last Updated : 20 Nov 2016 10:55 AM

கடந்த ஆண்டு சொன்னது பலித்தது: சென்னையும், தென் மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கும் - மீண்டும் எச்சரிக்கும் ஆற்காடு பஞ்சாங்கம்

கடந்த ஆண்டு ஆற்காடு பஞ்சாங் கத்தில் கணித்தபடி சென்னையை பெரும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல், இந்த ஆண்டும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் என, ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்க வெளியீட்டாளர் கே.என்.நாராயண மூர்த்தி எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே இரவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல் லாத நோட்டுகளாக மாறிவிட்டன. மக்கள் தங்களிடம் இருந்த செல்லாத நோட்டுகளை வங்கியில் வரிசையில் நின்று மாற்றி வரு கின்றனர். இதை முன்கூட்டியே ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணித்து வெளியிட்டுள்ளனர். இந்த பஞ்சாங் கத்தின் பக்கங்கள் ‘வாட்ஸ் அப்’ மூலம் வேகமாக பரவியது. அதில், ‘‘வங்கிகளில் பல மாற்றம் ஏற் படும். கணக்கில் இல்லாத கறுப் புப் பணத்தைக் கண்டுபிடிக்க நேரும். தணிக்கைத் துறையின் மூலம் அரசாங்கத்துக்கு கோடிக் கணக்கான பணம் சேரும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பஞ்சாங்கத்தின் 2015-ம் ஆண்டு பதிப்பில், வரலாறு காணாத வெள்ளம் சென்னையை தாக்கும் என்ற தகவலும், இந்த ஆண்டுக் கான பஞ்சாங்கத்தில் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியே ஆட்சியைப் பிடிக் கும் என்ற தகவலும் குறிப்பிடப் பட்டிருந்தது. அந்த வரிசையில் அடுத்த மாதம் (டிசம்பர்) மீண்டும் வெள்ளத்தில் சென்னை மிதக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக, ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங் கத்தை வெளியிடும் கே.என்.நாரா யணமூர்த்தி(79) கூறியதாவது:

ஆரணி எஸ்.வி.வனம் அரச குடும்பத்தின் ஆஸ்தான ஜோதிட ராக எனது பாட்டனார் கா.வெ.சீதாராமய்யர் இருந்தார். அத்துடன் ஆற்காடு நவாபுகளுக்கும் சரபோஜி மன்னர்களுக்கும் ஜோதிட ராகவும் இருந்தார். ஆண்டுதோறும் அரசர்களுக்கு ஜோதிடக் குறிப்பு களை கொடுத்துவந்தார். சித்திரை முதல் பங்குனி மாதம் வரை பஞ்சாங்கக் குறிப்பை வெளியிட் டார். அவரது வழியில் எனது தகப்பனார் கா.சீ.வெ.சுப்புராமய் யர், நான் மற்றும் எனது மகன் கே.என்.சுந்தரராஜன் என 4-வது தலைமுறையாக தொடர்ந்து 116 ஆண்டுகளாக பஞ்சாங்கத்தை வெளியிட்டு வருகிறோம்.

1970-ம் ஆண்டுக்குப் பிறகு ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஜெகத் ஜாதகம் (பூமியின் ஜாதகம்) என்ற அடிப்படையில் உலகில் நடைபெற வாய்ப்பு உள்ள முக் கிய நிகழ்வுகளை வெளியிட்டு வருகிறோம். சூரியனின் இயக் கத்தை அடிப்படையாகக் கொண்டு கணித்து இதனை வெளியிடு கிறோம். எங்களது கணிப்புகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை எச்சரிக்கையாகக் கூறுகிறோம். பஞ்சாங்கக் குறிப்புகளை முதலு தவிப் பெட்டியாகக் கருதி ஆபத் தைத் தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

சென்னையை மீண்டும் வெள்ளம் தாக்கும் என்பது எங்கள் கணிப்பு. கால்வாய் தூர்வாருதல், தாழ்வான பகுதிகளை கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளால் இயற்கையின் சீற்றத்தைத் தவிர்க்க முடியும். நாங்கள் வெளியிடும் பஞ்சாங்கத்தை இந்தியா மட்டும் இல்லாமல் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தமிழர்கள் வாங்கிச் செல்கின்றனர். ஆற்காடு பஞ்சாங்கம் என்ற பெய ரில் பல பஞ்சாங்கப் புத்தகங்கள் வெளிவருகின்றன. இதில், லாவண்யா பதிப்பகம்தான் எங் களின் அடையாளம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x