கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருநங்கைகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருநங்கைகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே வேலை கேட்டு திருநங்கைகள் சாலை மறியல்

Published on

கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே, வேலை வழங்கக் கோரி திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் சிலர் நேற்று காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் திடீரென ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

"தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடமும் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என சாலையில் அமர்ந்து தங்கள் கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பினர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றனர்.

திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in