Published : 14 Jul 2014 08:44 AM
Last Updated : 14 Jul 2014 08:44 AM
தாராபுரம் அருகே அரசுப் பேருந்தும், காரும் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர் ஊத்துக்குளி சாலை பாளையக்காடு எம்ஜிஆர் நகர் டி.எஸ்.பி. காலனி பகுதி யைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (32). பனியன் தொழில் செய்து வந்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வசித்து வந்த இவரது தாத்தா காளியப்பன் கடந்த வாரம் இறந்தார்.
இதையொட்டி, துக்கம் விசாரிப்பதற்காக வெங்கடேஷ், இவரது மகன் பரத் (8), சித்தி கோவிந்தம்மா (50), பாட்டி கமலாம்மா (80), ஊழியர் பரத் (17), உறவினர்கள் பால்ராஜ் (25), ரங்கம்மா (75) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருப்பூரில் இருந்து காரில் ஆண்டிப்பட்டி சென்றனர்.
துக்கம் விசாரித்துவிட்டு, ஆண்டிப்பட்டியில் இருந்து பிற்பகலில் திருப்பூர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
காரை வெங்கடேஷ் ஓட்டி வந்தார். ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில், ரங்கபாளையம் பிரிவில் திரும்பியபோது எதிரே வந்த அரசுப் பேருந்து மீது கார் மோதியது. இதில் காரில் வந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரின் கதவுகள் உடைக்கப் பட்டு இறந்தவர்கள் மீட்கப் பட்டனர். இது குறித்து தாராபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT